24.  மனிதனை யார் காப்பாற்றுவார்கள்?

பிறந்த குழந்தைக்கு பாலைக் கொண்டு வருவது யார்? பெற்ற தாய் குழந்தைக்கு தாய்ப் பாலைக் கொண்டு வருகிறாரா? அல்லது படைத்த இறைவன் பாலைக் கொண்டு வருகிறானா?
24.  மனிதனை யார் காப்பாற்றுவார்கள்?

பிறந்த குழந்தைக்கு பாலைக் கொண்டு வருவது யார்? பெற்ற தாய் குழந்தைக்கு தாய்ப் பாலைக் கொண்டு வருகிறாரா? அல்லது படைத்த இறைவன் பாலைக் கொண்டு வருகிறானா?

குழந்தை பிறந்த 21 நாள் ஆகிறது. குழந்தைக்கு போதிய அளவு தாய்ப் பால் சுரக்கவில்லை. மாட்டுப்பால் கொடுக்கலாமா என்று ஒரு தாய் கேட்கிறார். குழந்தையை படைத்த இறைவன் அந்தக் குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொறுப்பை ஏற்று இருக்கிறான். ஆனால் அந்த குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை.

குழந்தையின் பெற்றோர்தான் பால் குறைந்ததற்கு காரணம். அந்தத் தாயின் பயமும் கவலையும் தான் காரணம். நாம் கவலை, பயம் கொள்ளும் போது நம் உறுப்புக்கள் அதிலுள்ள செல்கள் இறந்துவிடுகின்றன. பால் உற்பத்தியாகக் கூடிய மார்பகத்தில் உயிரோட்டம் இல்லை. மார்பு இறந்து கொண்டிருக்கிறது. மகன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் தந்தை இறந்துவிட்டார் என்று ஒரு செய்தி கேள்விப்படுகிறோம். அந்த இறந்த செய்தி அந்த தந்தைக்கு கவலையும் துக்கமும் தருகிறது. அந்த துக்கம் அவரது உயிரையே பறித்துவிட்டது.

பெற்ற தாயின் கவலை, அவளின் மார்பின் உயிரோட்டத்தை நீக்கிவிட்டது. பயமும் கவலையும் நீங்கும் போது பால் சுரக்கும். பயத்தையும், கவலையையும் நம்மால் நீக்க முடியாது. இறைவனால் தான் நீக்க முடியும்.

இறைவன் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகிறான். தான் நாடியவருக்கு உணவை சுருக்கியும் விடுகிறான். அவன் நாடினால் குழந்தைக்கு தாயின் பாலை அதிகமாக்குவான். பெற்றோரின் அநியாயத்தின் காரணமாக தாய்ப்பால் குறைக்கப்படுகிறது. தாய் பால் இல்லாமலும் ஆக்கப்படுகிறது.

நம் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும். தவறை உணர்ந்து, பெற்றோர்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் இரண்டு வருடத்திற்கு குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். 3 மாதங்களுக்குப் பிறகு மற்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக 2 வருடங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் இரவில் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. பகலில் மட்டும் கொடுத்தால் போதும்.

குழந்தைக்கு பிறந்ததிலிருந்து எந்த மருந்தும் கொடுக்க வேண்டியதில்லை. பிள்ளை மருந்து என்று எதுவும் கொடுக்க வேண்டாம். குழந்தை வாந்தியெடுத்தால் வாந்திக்கு மருந்து கொடுக்கம் போதுதான் அந்தக் குழந்தைக்கு எல்லா கஷ்டமும் உண்டாக ஆரம்பிக்கிறது. குழந்தைக்கு பிற்காலத்தில் ஏற்படும். சகல நோய்களுக்கும், காரணம், வாந்திக்காக மருந்து கொடுப்பதுதான்.

வாந்தி, பேதி, ஜூரம் எதுக்கும் மருந்து கொடுக்க வேண்டும். இறைவனை நம்பும் பெற்றோர்கள் அவர்களே, பிரார்த்தனை செய்வார்கள். தேவைப்பட்டால் எனக்கு போன் செய்வார்கள். என்னிடம் பிரார்த்தனை வேண்டி போன் செய்வார்கள். இறைவழி மருத்துவத்தில் நான் குணப்படுத்துகிறேன் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

குழந்தைக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதும், அந்தப் பெற்றோர்களையும், பிரார்த்தனை செய்யச் சொல்வதும், இறை நம்பிக்கையில் உறுதியாக இருக்க வைப்பதும் தான். மருந்து மாத்திரை இல்லாமல் சுகம் ஆவதைப் பார்க்கிறார்கள். இறை அத்தாட்சியைக் காட்டுவது நம்முடைய வேலையாக இருக்கிறது. குழந்தைக்கு கொடுக்கும் வாந்தி மருந்து காரணமாக, குழந்தையின் குடலில் உருவான நச்சு தங்கி விடுகிறது. பேதியை நிறுத்த கொடுக்கும் மருந்து காரணமான குடலில் உருவான நச்சு தங்கிவிடுகிறது.

அறியாமையின் காரணமாக தன் குழந்தைக்கே பெற்றோர் அநியாயம் செய்கிறார்கள். நச்சு குடலில் தங்கி உடலில் தங்கி விடுவதன் காரணமாக பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கு அலர்ஜி நோய் உண்டாகிறது. உடம்பில் அவ்வப்போது அரிப்பும், தடிப்பும் உண்டாகிறது. அதையும் ஒரு நோய் என்று கருதிவிடுகிறார்கள். மருத்துவர், அலர்ஜி என்று சொன்னதும் நம்பி விடுகிறார்கள். ஏற்கனவே குழந்தைக்கு கொடுத்த, பேதி வாந்தி, ஜூர மருந்துகள் தான் உடலில் தங்கி அலர்ஜி ஏற்படுத்துகிறது என்பதை அறியாமல் போய்விடுகிறார்கள்.

அலர்ஜி என்று மருந்தைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த மருந்து “ஆன்டிஹிஸ்டமைன்’ என்ற மருந்து. அது ‘அவில்’ என்ற மாத்திரையாகவும், ‘செட்ரின்’ என்ற மாத்திரையாகவும் மருந்துக் கடைகளில் கிடைக்கிறது இதையே தான் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்கள்.

இந்த ‘அவில்’ மருந்து அலர்ஜிக்கு கொடுக்கப்படுகிறது. அலர்ஜி என்றால் நச்சுத் தன்மையானது தோல் மூலமாக உடம்பு முழுவதும். சிகப்பு நிறத்தில் குண்டு குண்டாக தோலில் வெளியே வருவதுதான். இதனால் நம் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது.

ஆனால் மருத்துவர் கொடுக்கும் மேற்கண்ட மாத்திரை காரணமாக, நச்சுத்தன்மை உடம்புக்குள் தங்கி விடுகிறது. இப்போது தான் பெரும் கேடு உண்டாகிறது. நச்சுத்தன்மை உடலில் தங்குவதால் சிறுநீரகங்கள் படிப்படியாக செயலிழக்க ஆரம்பிக்கின்றன.

அலர்ஜி மாத்திரைகள் தொடருகின்றன. கடைசியாக ‘ஸ்டிராய்டு’ மாத்திரையை மருத்துவர் கொடுக்கிறார். இப்போது நம் உடம்பானது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை இழக்க ஆரம்பிக்கிறது. எல்லா உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. மிகவும் ஆபத்தான நிலையை மனிதன் அடைகிறான்.

இப்போது இந்த மனிதனை காப்பாற்ற யாரும் இல்லை. இந்த நிலையிலாவது கடவுள் பக்கம் திரும்பினால் கடவுள் பக்கம் திரும்பினால் கடவுள் ஒரு வேளை மன்னிக்கலாம். கடவுளை மறந்து மிதமிஞ்சிப் போய், மருந்து மாத்திரைகள், மருத்துவர்கள், ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் பக்கம் முழுமையாக சாய்ந்து விட்டார்கள். ‘நாங்கள் உறுப்புகளை இழந்துவிட்டோம். எங்களுக்கு கருணை கூர்ந்து உங்கள் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்’ என்ற ஒலி எங்கும் கேட்கிறது.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com